ஆலய வரலாறு
பல நூற்றாண்டுகளாக பக்தியும் தெய்வீக அருளும்
ஒரு புனிதமான மரபு
வவுனியா பூத்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஸ்மி சமேத நரசிங்கர் ஆலயமானது நீண்டகால வரலாற்றை கொண்ட ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் தோற்றமும் பற்றி மரபு வழி கதைகள் மூலமும் செவி வழி கதைகளாகவும் வரலாறு ஆசிரியர்களின் தகவல்கள் மூலமும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் வன்னிப்பிரதேசத்தை ஆட்சி செய்த பண்டார வன்னியன் எனும் மன்னன் வேட்டைக்கு செல்லும் போது காட்டுப் பகுதியாக காணப்பட்ட இப்பூத்தோட்ட பகுதியில் இத்தி மரத்தின் கீழ் சூலம் வைத்து வழிபாட்டதாகவும் பிற்காலத்தில் அதுவே நரசிங்கர் ஆலயமாக வளர்ச்சி கண்டதாகவும் பொதுமக்காளால் கூறப்படுகின்றது. பிற்காலத்தில் பல வருடங்களுக்கு வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த வேலு சுப்பிரமணியம் என்பவரும் அவரது குடும்பத்தார்களும் பூசைகள் செய்து பராமரித்து வந்ததுள்ளதாக கூறப்படுகின்றது.
கட்டிடக்கலை
இந்த ஆலயம் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்து புராணங்களிலிருந்து காட்சிகளை சித்தரிக்கும் ஆயிரக்கணக்கான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அற்புதமான கோபுரம் இதில் உள்ளது. கர்ப்பகிருஹத்தில் தெய்வீக ஒளியில் மூல தெய்வம் வீற்றிருக்கிறது.
திருவிழாக்கள்
பிரம்மோத்சவம், நவராத்திரி, தீபாவளி, தைப்பொங்கல் உட்பட அனைத்து முக்கிய இந்து திருவிழாக்களையும் ஆலயம் பக்தியுடன் கொண்டாடுகிறது. தமிழ் நாட்காட்டியின்படி மாத திருவிழாக்கள் விரிவான சடங்குகளுடன் நடைபெறுகின்றன.